"பாம்பு.. இது ஸ்க்வாமட் வரிசையை சேர்ந்தது. பங்காரஸ் கைரூளியஸ் இனம். எலாபிடே குடும்பம்.." என்றாள் ரசிகா அதை பார்த்துவிட்டு.
"இதன் பெயர் கட்டுவிரியன்.." என்றான் செந்திலகன் இதழ் விரித்தபடி.
"கேள்விப்பட்டுள்ளேன்.." என்றவள் அந்த பாம்பை நோக்கி கையை நீட்டினாள். சீறியது பாம்பு.
"பண்ணைக்குள் பாம்பு வந்தது தெரிந்தால் மைன்டி8 நம்மை தவறாக எண்ணி விடுவார்.." கவலையோடு சொல்லியபடி அந்த பாம்பை வருடி விட்டாள்.
செந்திலகன் அவளுக்கு பதில் சொல்லும் முன்பே சைரன் சத்தத்தோடு அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றது ஒரு வாகனம். அதிலிருந்து இருவர் இறங்கினார்கள்.
"ஊர்வனவற்றின் பாதுகாவலர்கள்.." என்று ரசிகா அதிர்ச்சியடைந்த வேளையில் அவர்களின் அருகே வந்தனர் அந்த இருவரும்.
"அந்த பாம்பை பெற்றுச் செல்ல வந்துள்ளோம். இப்பாம்பு பங்காரஸ் 2547 என்ற பதிவெண்ணை கொண்டது. அருகிருக்கும் நகரமான டீ18யில் உள்ள ஒரு பாம்புகள் பத்திர வீடுகளில் வளர்க்கப்படுவது. நேற்றைய முன்தினம் எப்படியோ தப்பி வந்து விட்டதை இப்போதுதான் உங்களின் கேமரா பதிவின் மூலம் கண்டறிந்தோம்.." என்ற ஒருவன் பாம்பை வாங்கி தன்னிடமிருந்த கண்ணாடி ஜாடிக்குள் பத்திரப்படுத்தினான்.
பாம்பு கண்ணாடி ஜாடியில் இருந்தபடி ரசிகாவை பார்த்தது. ஏக்கமான பார்வை அது. சுதந்திரம் தேடும் ஜீவன் அது.
ஊர்வனவற்றின் பாதுகாவலர்கள் பாம்போடு அங்கிருந்து சென்றார்கள்.
ரசிகா வீட்டை நோக்கி நடந்தாள்.
"அந்த பாம்பிற்கு சுதந்திரம் தேவை.." என்றாள் சிறு குரலில்.
"ஆனா அந்த பாம்பு விஷமுடையது. இந்த பாம்பால் மைன்டி8க்கும் அவரது குடும்பத்திற்கும் ஆபத்து வரலாம்.." என்றவன் வீட்டின் கதவை ரசிகாவிற்காக திறந்து விட்டான். ரசிகா அவனை பார்த்து புன்னகைத்தாள்.
தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டினாள் ரசிகா. செந்திலகன் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டான். மிதமான இசை அந்த அறை முழுக்க பரவியது.
இசை அவர்கள் இருவருக்கும் உயிர்ப்பை தருகிறது என்றால் அது பொய்யில்லை.
மற்ற மனித எந்திரங்களை போல இல்லாமல் ரசிகாவும், செந்திலகனும் சற்று மாறுப்பட்டு இருந்தார்கள். அவர்களுக்கு இசை பிடித்திருந்தது. வானத்தை ரசிக்கவும், கவிதைகள் படிக்கவும் கூட பிடித்திருந்தது. வாசங்களை விரும்பினார்கள். தங்களின் வாழ்க்கைக்கு என்று ஒரு அர்த்தம் இருப்பதாக நம்பினார்கள். இது அனைத்தையும் விட முக்கியமாக கடவுள் ஒன்றை பற்றி புத்தகத்தில் படித்ததில் இருந்து கடவுளையும் தேட ஆரம்பித்தார்கள்.
"உணவு உண்ணலாமா.?" என கேட்டபடி உணவறை நோக்கி நடந்தான் செந்திலகன்.
ரசிகா அவனை பின்தொடர்ந்தாள். உணவு தயாராய் காத்திருந்தது. மெஷின் நீட்டிய உணவை வாங்கிக் கொண்டு வந்து ரசிகாவிடம் நீட்டினான்.
ரசிகாவும் அவனும் எதிரெதிரே அமர்ந்து உணவை உண்டார்கள்.
"முன்பொரு காலத்தில் உணவில் ருசியென்ற ஒன்று இருந்ததாம்.." உணவு தட்டை பார்த்தபடி சொன்னாள் ரசிகா.
செந்திலகன் ஆமென தலையசைத்தான். பழங்கால திரைப்படங்களில் வகை வகையான உணவுகள் காட்டப்பட்டு இருக்கும். திரையில் பார்க்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆவலை உண்டு செய்யும்.
அவர்களின் தட்டில் இருந்தது காய்ந்த உணவு உருண்டைகள். அதில் அவர்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் விட்டமின்களும் கலக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் தினம் செலவழித்த கலோரிகளுக்கு ஏற்ப உணவில் சத்துகள் கலக்கப்படும். உணவு செய்யும் கருவி இவர்களின் உடல்நலம் மீது அதீத அக்கறை வைத்துள்ளது.
அவர்கள் அமர்ந்திருந்த மேஜை அவர்கள் உணவை முடித்துக் கொண்டதும் அந்த உண்ட தட்டை தனக்குள் மறைத்துக் கொண்டது. அவர்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு வந்து வைத்தது அவர்களின் செல்ல மெஷின்.
அவளுக்கு சரியாய் ஒரு டம்ளர். செந்திலகனுக்கு முக்கால் டம்ளர். அவர்களின் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று ஸ்கேன் செய்து பார்த்தபிறகுதான் தண்ணீரை கூட தரும் அவர்களின் அந்த செல்ல மெஷின்.
செந்திலகன் தன் படுக்கையறை நோக்கி நடந்தான். ரசிகா தன் அறையின் வாயிலில் நின்றபடி அவனை பார்த்தாள்.
"முன்பொரு காலத்தில் உணவிற்கு ருசி என்ற ஒன்று இருந்தது போல நம்மை போன்றவர்களுக்கு உணர்வுகள் என்ற ஒன்றும் இருந்ததாம்.." என்றாள்.
செந்திலகன் ஆமென தலையசைத்தான். "காதல் என்ற ஒன்றை பற்றி கூட புத்தகத்தில் படித்துள்ளேன் நான்.." என்றான்.
ரசிகா அவனை விழியெடுக்காமல் பார்த்தாள். என்னவோ உணர வைக்க முயன்றது அவளின் வெண்ணிற விழிகள். செக்க செவேலென்று சிவந்து கிடந்த அவளின் உதடுகள் எதையோ கூற முயன்றது.
"குட் நைட்.." என்று விட்டு தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான் செந்திலகன்.
உறங்குவதற்கான நேரம் இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்த பத்து நிமிடங்களுக்கும் அவனின் யோசனை ரசிகா சொன்னதையே சுற்றி வந்தன.
'உணர்வுகள்.. பசி, தூக்கம், வெட்கம், தாகம், கோபம், சோகம், கண்ணீர், காதல், காமம்.. போன்றவை தானாகவே உருவாகினால் அதற்கு பெயர்தான் உணர்வுகள்..' என்று சொல்லியது சிலிக்கானால் பாதுகாக்கப்பட்ட அவனின் மூளை.
கைகளை பார்த்தான். வண்ணம் பூசப்பட்ட இரும்பு தகடுகள் அவனின் கைகளை சுற்றி பாதுகாப்பாக அமைந்திருந்தன. உடம்பினுள் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தத்தின் அளவும், இதயத்தின் துடிப்பும், நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளும், மூளையின் வேகமும் கணக்கிடப்பட்டு வலது கையின் வண்ண தகட்டின் மீதிருந்த திரையில் ஒளிப்பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
அவனின் இதயம் முதல் முகுளம் வரை பலவும் செயற்கையே. அவன் பிறந்ததும் செயற்கையே. செயற்கை கருமுட்டையில் செயற்கையான ஒரு விந்தணுவை செலுத்தி, செயற்கையான கருவி ஒன்றிற்குள் உருவாக்கப்பட்டு பிரசவத்தையே சந்தித்திராமல் பிறந்தவன்தான் இவன்..
இவன் பிறந்த பத்தாம் நாளே இதயம் முதல் மற்ற அனைத்து உடல் உறுப்புகள் வரை தனியே வெட்டியெடுக்கப்பட்டு அதற்கு பதிலாக செயற்கை கருவிகள் பொருத்தப்பட்டு விட்டது.
செயற்கை கருவிகள் பொருத்தப்பட்டு விட்டால் அவர்களை எந்த நோயும் தீண்டாது.
அனைத்தும் செயற்கையானதில் உணர்வுகளும் செயற்கையாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கருவிகள் நிறைந்து கிடந்தன. அவர்களின் பசி தாகம் அறிந்து உணவை தரும் கருவிகள், அவர்களின் செயற்கை உறுப்புகளில் பிசுபிசுப்பு குறைகையில் உடனே கவனித்து மருத்துவரிடம் அனுப்பி வைக்கும் கருவிகள், அவர்களின் எண்ணங்களை படிக்க பல வருடங்களாக முயன்றுக் கொண்டிருக்கும் கருவிகள் என அனைத்தும் அவர்களுக்காகவே உழைத்தன.
ஆனால் ரசிகாவும் செந்திலகனும் மைன்டி8க்காக உழைக்கிறார்கள்.
செவ்வாயுலகில் இருந்த மைன்டி8யின் வீடு அது.
மைன்டி8 இருக்கையில் அமர்ந்தபடி தனது அடுத்த நாளுக்கான வேலைகளை காகித தாளில் எழுதிக் கொண்டிருந்தான்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பியிருந்த சாய்னியா2 தன் தந்தையின் அருகே வந்தாள்.
"நாளைய நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு அப்பா.." என்று சொல்லி அவனிடம் அழைப்பிதழ் ஒன்றை நீட்டினாள்.
மைன்டி8 அதை வாங்கி வாசித்தான். அதில் எழுதி இருந்த நான்கு வாசகங்களை படித்துப் புரிந்துக் கொள்ள அவனுக்கு இருபது நிமிடங்கள் பிடித்தது.
அழைப்பிதழைப் படித்து முடித்ததும் அதை தனது மேஜையின் ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டான்.
"சரியான நேரத்துக்கு வரேன் சாய்னியா2.." என்றான்.
சாய்னியா2 திரும்பி நடந்தாள்.
"உணவு சமைக்க வருகிறாயா.?" என்று சமையலறையிலிருந்து கேட்டாள் அவளின் அம்மா மியானி7.
"வரேன்ம்மா.." என்றபடி சென்றவள் சமையலறை மேஜையின் மீது இருந்த சிவந்த நிற கீரைகளை ஆய்ந்து வைக்க ஆரம்பித்தாள்.
"அழகாய் இருக்கிறாய் நீ.!" என்றாள் அம்மா அவளை பார்த்து.
செயற்கையாக புன்னகைத்த சாய்னியா2 "நன்றிகள்ம்மா.." என்றாள். இது போன்ற பாராட்டுக்களுக்கு எப்படி புன்னகைக்க வேண்டும் என்று அவர்களின் பள்ளியில் தினம் ஒரு மணி நேரம் சொல்லித் தந்துக் கொண்டிருந்தார்கள்.
வெங்காயம் ஒன்றை எடுத்து வெட்டினாள் சாய்னியா2. "இவ்வெங்காயத்தை பார்த்ததும் எனக்கு நம் பண்ணை வீட்டின் ஞாபகம் வந்துவிட்டது.." என்றாள்.
மியானி7 தான் தோலுரித்துக் கொண்டிருந்த தக்காளியை பார்த்தாள். கருஞ்சிவப்பு நிறத்தில் சதுர வடிவில் இருந்தது அந்த தக்காளி.
"நம் பண்ணை தக்காளி செடிகளுக்கு உரம் போதவில்லை என்று நினைக்கிறேன். போனமுறை சென்றபோது நமது தோட்ட தக்காளிகள் விதைகளோடும், உருண்டை வடிவத்திலும் அசிங்கமாக இருந்தன. இதற்கு முன் இப்படி ஒரு தக்காளியை நான் பார்த்தே இல்லை. நான் படித்த அருவெறுப்பிற்க்கும் அந்த தக்காளிக்கும் சம்பந்தம் உண்டு என்று நினைக்கிறேன்.." என்று கவலையோடு சொன்னாள்.
"ரசிகா இந்த முறை சரியான அளவு உரமிடுவாள் அம்மா. நான் தினமும் என் கணினியின் மூலம் அவர்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.." என்றாள் சாய்னியா2.
கம்பு அரிசி சாதமும், கீரை குழம்பும், அவரை கத்தரி பொரியலும் சமைத்து முடித்தனர் இருவரும்.
அவை செவ்வாயுலகில் இயந்திரங்களை வைத்து உருவாக்கப்படும் தானியங்கள். இயற்கை உணவுகள் என்ற பெயரில் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. விதைகள் இல்லாத காய்கள், கனிகள்.. தண்ணீர் மட்டும் கோர்த்திருக்கும் கீரைகள், கற்களையும், மண் துகள்களையும் போலவே ருசியற்று இருக்கும் தானியங்கள்.
புவியுலகில் விளையும் உணவுகளை இவர்கள் உண்ண வேண்டும் என்று இயந்திர மனிதர்கள் வெகுவாக முயற்சி வருகின்றனர். ஆனால் வடிவமற்ற புவியுலக காய் கனிகளை உண்ணவே இவர்களுக்கு பயமாக இருந்தது. இதற்காக போராட்டம் கூட பலமுறை நடத்தி விட்டார்கள். இறந்தாலும் புவியுலக தானியங்களை உண்ண மாட்டோம் என்பது இவர்களின் ஒரே உறுதிமொழி. பல ஆயிரம் முறை மரபணு மாற்றம் செய்யப்பட்டு தங்களின் முன்னோரால் உருவாக்கப்பட்ட இந்த வட்ட, கட்ட, செவ்வக, முக்கோண, நட்சத்திர வடிவ காய்கனிகள்தான் அவர்களுக்கு உண்ணுவதற்கான தைரியத்தை தந்தது.
இரவு உணவை சாய்னியா2வும் அவளது பெற்றோரும் இணைந்து அமர்ந்து உண்டார்கள். உண்ணும் மேஜையின் வந்து நின்றது இயந்திர மனிதன் ஒன்று.
"ருசிக்கிறதா.?" அவர்களின் முகத்தை ஆழ்ந்து ஆராய்ந்தபடி கேட்டது.
மறுப்பாக தலையசைத்தாள் சாய்னியா2.
"அப்படி என்றால் என்னவென்று கூட தெரியவில்லை.. அனைத்தும் முன்னோர் குறிப்பட்டபடியே இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட காய்கறிகள். ஆனாலும் ருசிக்க மறுக்கிறது.." கவலையோடு சொன்னாள். ஆனால் இவள் இயற்கை என்று எண்ணும் எதுவுமே இயற்கை இல்லை என்பதை எப்போது அறிவாள்.?
"கவலை வேண்டாம். நாளைய உணவில் ருசி தேடுவோம்.." என்ற அந்த இயந்திர மனிதன் அன்றைய விசயத்தை குறித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது.
தனது சுருங்கிய கைகளை பார்த்தபடியே வந்து படுக்கையில் விழுந்தான் மைன்டி8.
தொடரும் நட்புகளே. எபிசோட் பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க.
# crazy writer story
# tamil novels
# science fiction story
"இதன் பெயர் கட்டுவிரியன்.." என்றான் செந்திலகன் இதழ் விரித்தபடி.
"கேள்விப்பட்டுள்ளேன்.." என்றவள் அந்த பாம்பை நோக்கி கையை நீட்டினாள். சீறியது பாம்பு.
"பண்ணைக்குள் பாம்பு வந்தது தெரிந்தால் மைன்டி8 நம்மை தவறாக எண்ணி விடுவார்.." கவலையோடு சொல்லியபடி அந்த பாம்பை வருடி விட்டாள்.
செந்திலகன் அவளுக்கு பதில் சொல்லும் முன்பே சைரன் சத்தத்தோடு அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றது ஒரு வாகனம். அதிலிருந்து இருவர் இறங்கினார்கள்.
"ஊர்வனவற்றின் பாதுகாவலர்கள்.." என்று ரசிகா அதிர்ச்சியடைந்த வேளையில் அவர்களின் அருகே வந்தனர் அந்த இருவரும்.
"அந்த பாம்பை பெற்றுச் செல்ல வந்துள்ளோம். இப்பாம்பு பங்காரஸ் 2547 என்ற பதிவெண்ணை கொண்டது. அருகிருக்கும் நகரமான டீ18யில் உள்ள ஒரு பாம்புகள் பத்திர வீடுகளில் வளர்க்கப்படுவது. நேற்றைய முன்தினம் எப்படியோ தப்பி வந்து விட்டதை இப்போதுதான் உங்களின் கேமரா பதிவின் மூலம் கண்டறிந்தோம்.." என்ற ஒருவன் பாம்பை வாங்கி தன்னிடமிருந்த கண்ணாடி ஜாடிக்குள் பத்திரப்படுத்தினான்.
பாம்பு கண்ணாடி ஜாடியில் இருந்தபடி ரசிகாவை பார்த்தது. ஏக்கமான பார்வை அது. சுதந்திரம் தேடும் ஜீவன் அது.
ஊர்வனவற்றின் பாதுகாவலர்கள் பாம்போடு அங்கிருந்து சென்றார்கள்.
ரசிகா வீட்டை நோக்கி நடந்தாள்.
"அந்த பாம்பிற்கு சுதந்திரம் தேவை.." என்றாள் சிறு குரலில்.
"ஆனா அந்த பாம்பு விஷமுடையது. இந்த பாம்பால் மைன்டி8க்கும் அவரது குடும்பத்திற்கும் ஆபத்து வரலாம்.." என்றவன் வீட்டின் கதவை ரசிகாவிற்காக திறந்து விட்டான். ரசிகா அவனை பார்த்து புன்னகைத்தாள்.
தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டினாள் ரசிகா. செந்திலகன் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டான். மிதமான இசை அந்த அறை முழுக்க பரவியது.
இசை அவர்கள் இருவருக்கும் உயிர்ப்பை தருகிறது என்றால் அது பொய்யில்லை.
மற்ற மனித எந்திரங்களை போல இல்லாமல் ரசிகாவும், செந்திலகனும் சற்று மாறுப்பட்டு இருந்தார்கள். அவர்களுக்கு இசை பிடித்திருந்தது. வானத்தை ரசிக்கவும், கவிதைகள் படிக்கவும் கூட பிடித்திருந்தது. வாசங்களை விரும்பினார்கள். தங்களின் வாழ்க்கைக்கு என்று ஒரு அர்த்தம் இருப்பதாக நம்பினார்கள். இது அனைத்தையும் விட முக்கியமாக கடவுள் ஒன்றை பற்றி புத்தகத்தில் படித்ததில் இருந்து கடவுளையும் தேட ஆரம்பித்தார்கள்.
"உணவு உண்ணலாமா.?" என கேட்டபடி உணவறை நோக்கி நடந்தான் செந்திலகன்.
ரசிகா அவனை பின்தொடர்ந்தாள். உணவு தயாராய் காத்திருந்தது. மெஷின் நீட்டிய உணவை வாங்கிக் கொண்டு வந்து ரசிகாவிடம் நீட்டினான்.
ரசிகாவும் அவனும் எதிரெதிரே அமர்ந்து உணவை உண்டார்கள்.
"முன்பொரு காலத்தில் உணவில் ருசியென்ற ஒன்று இருந்ததாம்.." உணவு தட்டை பார்த்தபடி சொன்னாள் ரசிகா.
செந்திலகன் ஆமென தலையசைத்தான். பழங்கால திரைப்படங்களில் வகை வகையான உணவுகள் காட்டப்பட்டு இருக்கும். திரையில் பார்க்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆவலை உண்டு செய்யும்.
அவர்களின் தட்டில் இருந்தது காய்ந்த உணவு உருண்டைகள். அதில் அவர்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் விட்டமின்களும் கலக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் தினம் செலவழித்த கலோரிகளுக்கு ஏற்ப உணவில் சத்துகள் கலக்கப்படும். உணவு செய்யும் கருவி இவர்களின் உடல்நலம் மீது அதீத அக்கறை வைத்துள்ளது.
அவர்கள் அமர்ந்திருந்த மேஜை அவர்கள் உணவை முடித்துக் கொண்டதும் அந்த உண்ட தட்டை தனக்குள் மறைத்துக் கொண்டது. அவர்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு வந்து வைத்தது அவர்களின் செல்ல மெஷின்.
அவளுக்கு சரியாய் ஒரு டம்ளர். செந்திலகனுக்கு முக்கால் டம்ளர். அவர்களின் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று ஸ்கேன் செய்து பார்த்தபிறகுதான் தண்ணீரை கூட தரும் அவர்களின் அந்த செல்ல மெஷின்.
செந்திலகன் தன் படுக்கையறை நோக்கி நடந்தான். ரசிகா தன் அறையின் வாயிலில் நின்றபடி அவனை பார்த்தாள்.
"முன்பொரு காலத்தில் உணவிற்கு ருசி என்ற ஒன்று இருந்தது போல நம்மை போன்றவர்களுக்கு உணர்வுகள் என்ற ஒன்றும் இருந்ததாம்.." என்றாள்.
செந்திலகன் ஆமென தலையசைத்தான். "காதல் என்ற ஒன்றை பற்றி கூட புத்தகத்தில் படித்துள்ளேன் நான்.." என்றான்.
ரசிகா அவனை விழியெடுக்காமல் பார்த்தாள். என்னவோ உணர வைக்க முயன்றது அவளின் வெண்ணிற விழிகள். செக்க செவேலென்று சிவந்து கிடந்த அவளின் உதடுகள் எதையோ கூற முயன்றது.
"குட் நைட்.." என்று விட்டு தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான் செந்திலகன்.
உறங்குவதற்கான நேரம் இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்த பத்து நிமிடங்களுக்கும் அவனின் யோசனை ரசிகா சொன்னதையே சுற்றி வந்தன.
'உணர்வுகள்.. பசி, தூக்கம், வெட்கம், தாகம், கோபம், சோகம், கண்ணீர், காதல், காமம்.. போன்றவை தானாகவே உருவாகினால் அதற்கு பெயர்தான் உணர்வுகள்..' என்று சொல்லியது சிலிக்கானால் பாதுகாக்கப்பட்ட அவனின் மூளை.
கைகளை பார்த்தான். வண்ணம் பூசப்பட்ட இரும்பு தகடுகள் அவனின் கைகளை சுற்றி பாதுகாப்பாக அமைந்திருந்தன. உடம்பினுள் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தத்தின் அளவும், இதயத்தின் துடிப்பும், நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளும், மூளையின் வேகமும் கணக்கிடப்பட்டு வலது கையின் வண்ண தகட்டின் மீதிருந்த திரையில் ஒளிப்பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
அவனின் இதயம் முதல் முகுளம் வரை பலவும் செயற்கையே. அவன் பிறந்ததும் செயற்கையே. செயற்கை கருமுட்டையில் செயற்கையான ஒரு விந்தணுவை செலுத்தி, செயற்கையான கருவி ஒன்றிற்குள் உருவாக்கப்பட்டு பிரசவத்தையே சந்தித்திராமல் பிறந்தவன்தான் இவன்..
இவன் பிறந்த பத்தாம் நாளே இதயம் முதல் மற்ற அனைத்து உடல் உறுப்புகள் வரை தனியே வெட்டியெடுக்கப்பட்டு அதற்கு பதிலாக செயற்கை கருவிகள் பொருத்தப்பட்டு விட்டது.
செயற்கை கருவிகள் பொருத்தப்பட்டு விட்டால் அவர்களை எந்த நோயும் தீண்டாது.
அனைத்தும் செயற்கையானதில் உணர்வுகளும் செயற்கையாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கருவிகள் நிறைந்து கிடந்தன. அவர்களின் பசி தாகம் அறிந்து உணவை தரும் கருவிகள், அவர்களின் செயற்கை உறுப்புகளில் பிசுபிசுப்பு குறைகையில் உடனே கவனித்து மருத்துவரிடம் அனுப்பி வைக்கும் கருவிகள், அவர்களின் எண்ணங்களை படிக்க பல வருடங்களாக முயன்றுக் கொண்டிருக்கும் கருவிகள் என அனைத்தும் அவர்களுக்காகவே உழைத்தன.
ஆனால் ரசிகாவும் செந்திலகனும் மைன்டி8க்காக உழைக்கிறார்கள்.
செவ்வாயுலகில் இருந்த மைன்டி8யின் வீடு அது.
மைன்டி8 இருக்கையில் அமர்ந்தபடி தனது அடுத்த நாளுக்கான வேலைகளை காகித தாளில் எழுதிக் கொண்டிருந்தான்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பியிருந்த சாய்னியா2 தன் தந்தையின் அருகே வந்தாள்.
"நாளைய நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு அப்பா.." என்று சொல்லி அவனிடம் அழைப்பிதழ் ஒன்றை நீட்டினாள்.
மைன்டி8 அதை வாங்கி வாசித்தான். அதில் எழுதி இருந்த நான்கு வாசகங்களை படித்துப் புரிந்துக் கொள்ள அவனுக்கு இருபது நிமிடங்கள் பிடித்தது.
அழைப்பிதழைப் படித்து முடித்ததும் அதை தனது மேஜையின் ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டான்.
"சரியான நேரத்துக்கு வரேன் சாய்னியா2.." என்றான்.
சாய்னியா2 திரும்பி நடந்தாள்.
"உணவு சமைக்க வருகிறாயா.?" என்று சமையலறையிலிருந்து கேட்டாள் அவளின் அம்மா மியானி7.
"வரேன்ம்மா.." என்றபடி சென்றவள் சமையலறை மேஜையின் மீது இருந்த சிவந்த நிற கீரைகளை ஆய்ந்து வைக்க ஆரம்பித்தாள்.
"அழகாய் இருக்கிறாய் நீ.!" என்றாள் அம்மா அவளை பார்த்து.
செயற்கையாக புன்னகைத்த சாய்னியா2 "நன்றிகள்ம்மா.." என்றாள். இது போன்ற பாராட்டுக்களுக்கு எப்படி புன்னகைக்க வேண்டும் என்று அவர்களின் பள்ளியில் தினம் ஒரு மணி நேரம் சொல்லித் தந்துக் கொண்டிருந்தார்கள்.
வெங்காயம் ஒன்றை எடுத்து வெட்டினாள் சாய்னியா2. "இவ்வெங்காயத்தை பார்த்ததும் எனக்கு நம் பண்ணை வீட்டின் ஞாபகம் வந்துவிட்டது.." என்றாள்.
மியானி7 தான் தோலுரித்துக் கொண்டிருந்த தக்காளியை பார்த்தாள். கருஞ்சிவப்பு நிறத்தில் சதுர வடிவில் இருந்தது அந்த தக்காளி.
"நம் பண்ணை தக்காளி செடிகளுக்கு உரம் போதவில்லை என்று நினைக்கிறேன். போனமுறை சென்றபோது நமது தோட்ட தக்காளிகள் விதைகளோடும், உருண்டை வடிவத்திலும் அசிங்கமாக இருந்தன. இதற்கு முன் இப்படி ஒரு தக்காளியை நான் பார்த்தே இல்லை. நான் படித்த அருவெறுப்பிற்க்கும் அந்த தக்காளிக்கும் சம்பந்தம் உண்டு என்று நினைக்கிறேன்.." என்று கவலையோடு சொன்னாள்.
"ரசிகா இந்த முறை சரியான அளவு உரமிடுவாள் அம்மா. நான் தினமும் என் கணினியின் மூலம் அவர்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.." என்றாள் சாய்னியா2.
கம்பு அரிசி சாதமும், கீரை குழம்பும், அவரை கத்தரி பொரியலும் சமைத்து முடித்தனர் இருவரும்.
அவை செவ்வாயுலகில் இயந்திரங்களை வைத்து உருவாக்கப்படும் தானியங்கள். இயற்கை உணவுகள் என்ற பெயரில் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. விதைகள் இல்லாத காய்கள், கனிகள்.. தண்ணீர் மட்டும் கோர்த்திருக்கும் கீரைகள், கற்களையும், மண் துகள்களையும் போலவே ருசியற்று இருக்கும் தானியங்கள்.
புவியுலகில் விளையும் உணவுகளை இவர்கள் உண்ண வேண்டும் என்று இயந்திர மனிதர்கள் வெகுவாக முயற்சி வருகின்றனர். ஆனால் வடிவமற்ற புவியுலக காய் கனிகளை உண்ணவே இவர்களுக்கு பயமாக இருந்தது. இதற்காக போராட்டம் கூட பலமுறை நடத்தி விட்டார்கள். இறந்தாலும் புவியுலக தானியங்களை உண்ண மாட்டோம் என்பது இவர்களின் ஒரே உறுதிமொழி. பல ஆயிரம் முறை மரபணு மாற்றம் செய்யப்பட்டு தங்களின் முன்னோரால் உருவாக்கப்பட்ட இந்த வட்ட, கட்ட, செவ்வக, முக்கோண, நட்சத்திர வடிவ காய்கனிகள்தான் அவர்களுக்கு உண்ணுவதற்கான தைரியத்தை தந்தது.
இரவு உணவை சாய்னியா2வும் அவளது பெற்றோரும் இணைந்து அமர்ந்து உண்டார்கள். உண்ணும் மேஜையின் வந்து நின்றது இயந்திர மனிதன் ஒன்று.
"ருசிக்கிறதா.?" அவர்களின் முகத்தை ஆழ்ந்து ஆராய்ந்தபடி கேட்டது.
மறுப்பாக தலையசைத்தாள் சாய்னியா2.
"அப்படி என்றால் என்னவென்று கூட தெரியவில்லை.. அனைத்தும் முன்னோர் குறிப்பட்டபடியே இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட காய்கறிகள். ஆனாலும் ருசிக்க மறுக்கிறது.." கவலையோடு சொன்னாள். ஆனால் இவள் இயற்கை என்று எண்ணும் எதுவுமே இயற்கை இல்லை என்பதை எப்போது அறிவாள்.?
"கவலை வேண்டாம். நாளைய உணவில் ருசி தேடுவோம்.." என்ற அந்த இயந்திர மனிதன் அன்றைய விசயத்தை குறித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது.
தனது சுருங்கிய கைகளை பார்த்தபடியே வந்து படுக்கையில் விழுந்தான் மைன்டி8.
தொடரும் நட்புகளே. எபிசோட் பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க.
# crazy writer story
# tamil novels
# science fiction story