மைன்டி8 ஒரு இயற்கை மனிதன். அவனே மூச்சுவிட்டு, அவனேதான் அவனுக்கான உணவை ஜீரணிக்கவும் செய்ய வேண்டும். மனிதனாக வாழ்வது உண்மையிலே கஷ்டமாக தோன்றியது அவனுக்கு. இப்போது நாற்பத்தியெட்டு நடந்துக் கொண்டிருக்கிறது அவனுக்கு. நாற்பத்தியெட்டு ஆண்டுகளும் நரகம் போலவேதான் இருந்தன அவனுக்கு.
நடப்பது சிரமம். தானாய் உறங்குவதும் சிரமம். தினம் அலுவலகம் சென்று உழைத்து வருவதும் சிரமம். அவனே அவனது மூளையை பயன்படுத்தி பாடங்களை படித்து ஒப்பித்து, எழுதி படிப்பகத்தை விட்டு வெளியே வந்தான். இப்போது அலுவலகத்திலும் அவனேதான் தினம் எழுத வேண்டும். அவனுக்கு மேலிருக்கும் இயந்திர மனிதன் என்ன சொல்கிறானோ அதை செய்து முடிக்க வேண்டும்.
மைன்டி8 மட்டுமல்ல அங்கிருந்த அனைத்து மனிதர்களுமே இந்த வாழ்க்கையை வெறுத்தார்கள். நான்கு தலைமுறைகள் முன்னால் வரை என்ன நடந்தது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். எழுவது முதல் உறங்குவது வரை அனைத்து நேரங்களிலும் மனிதர்கள் ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுக்கான வேலைகளை செய்ய இயந்திரங்கள் காத்து கிடந்தன. அவர்களின் தாகம், பசி தீரவும் மாத்திரைகள்தான் பயன்படுத்தப்பட்டன. அவர்களுக்குள் காதல், காமம், தூக்கம் வருவதற்கும் மாத்திரைகள்தான் பயன்படுத்தப்பட்டன.
அனைத்தும் எளிமையாக இருந்தன அப்போது. மானிட புரட்சி ஏற்பட்ட பிறகு அனைத்துமே கடினமாகி விட்டன. மனிதர்கள் பலர் இந்த புது வாழ்வுக்கு பயந்து தற்கொலை செய்துக் கொண்டார்கள். வேலைகள் செய்ய யாருக்குதான் பிடிக்கும்.?
ருசி தேவையில்லை. பசியும் தேவையில்லை. அவர்களுக்கு ஓய்வு மட்டுமே தேவை. படுக்கையில் படுத்த வண்ணம் வீடியோ கேம்களை ஆட வேண்டும். அவ்வளவே தேவை.
ஆனால் இவர்களின் எண்ணத்திற்கு மாறாக நிலவுலகில் இருந்த இயந்திர மனிதர்களோ பழைய மனிதர்களை உருவாக்கி விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த கால மனிதர்கள் உண்மையிலேயே மனிதர்களாக இருந்தார்கள். தங்களுக்கு தேவையான அனைத்தையும் அவர்களே தேடிக் கொண்டார்கள்.
ஆனால் இந்த புது யுக மனிதர்களுக்கோ சுவாசித்தலும் கடினம் என்று தற்கொலையை தேடினார்கள். பழங்கால மனிதர்களை பற்றி படித்து கேட்டு வாழ்ந்த இயந்திர மனிதர்களுக்கு அவர்களை பற்றி நினைக்கையிலேயே ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் வாரிசுகள்தான் இவர்கள் என்பதை பற்றி நினைக்கையில் விந்தையாக தோன்றியது.
***
புவியுலகில் இருந்த பண்ணை வீட்டில் செந்திலகன் தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தான். அவனின் எண்ணமெல்லாம் ரசிகாவை பற்றியே இருந்தது.
தான் ஒரு அரை பாதி மெஷின் என்று அவனுக்கு தெரியும். பிறகு ஏன் இப்படியெல்லாம் எண்ணம் வருகிறது என்று குழம்பினான்.
அடுத்த நாள் காலையில் அவனுக்கான எழும் நேரம் வரும் முன்பே அவனுடைய தூக்கம் தெளிந்து விட்டது. அவனை பரிசோதித்த அவனின் செல்ல இயந்திரம் "உனக்கு என்னவோ சரியில்லை செந்திலகன்.. நீ உடனே மருத்துவரை பார்த்தாக வேண்டும்.." என்றது.
செந்திலகனுக்கு இப்படி ஆனது ரசிகாவுக்கும் கவலையை தந்தது. அவனுக்கு துணையென அவளும் மருத்துவர் இல்லத்திற்கு சென்றாள்.
மருத்துவ இயந்திரம் அவனை தலை முதல் கால் வரை பரிசோதித்தது. அவனின் உடம்பில் எந்த குறையுமே இல்லை.
"உனக்குள் ஏதாவது எண்ணங்கள் தோன்றுகிறதா செந்திலகன்.?" சந்தேகத்தோடு கேட்டது அவனை பரிசோதித்துக் கொண்டிருந்த எந்திர மனிதனான நியாக்.
செந்திலகன் தயங்கினான். அவனின் தயக்கம் நியாக்கிற்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.
"எண்ணங்களை பற்றி எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை டாக்டர்.! என்னை மீறி நான் எண்ணுகிறேன். எனக்குள் ஒரு குரல் ஒலிக்கிறது. எனது மூளைக்குள் யாரோ ஒளிந்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது. சில நேரங்களில் என்னை நினைத்து எனக்கு பயமாகவும் இருக்கிறது.." என்றான்.
நியாக்கின் சந்தேகம் அதிகமானதே தவிர குறையவில்லை.
"சரி நீ கிளம்பு.. நான் சொல்லும் இன்னொரு நாள் வா.." என்றுச் சொல்லி அவனை அனுப்பி வைத்தது.
செந்திலகன் மருத்துவ இல்லத்தின் வெளியே வந்து நின்று வானத்தை பார்த்தான். சூரியனின் வெளிச்சத்தால் கண்கள் கூசியது. தன் காலுக்கடியில் இருந்த ஓடும் சக்கரங்களை இயக்கினான். அவன் நகரும் முன் அவனின் கரத்தை எட்டிப் பிடித்தாள் ரசிகா.
"நாம சேர்ந்துப் போகலாம்.." என்றாள்.
செந்திலகன் புன்னகையோடு அவளின் கையில் தன் கையை கோர்த்துக் கொண்டான்.
இருவரின் பாத சக்கரங்களும் ஒரே சீராக ஓடியது. ஈயத்தால் மெருக்கேற்றப்பட்ட சாலைகளில் இருவரும் பாய்ந்தோடினர்.
வீடு போய் சேரும் முன் சூரியனை இரண்டு மூன்று முறை பார்த்து விட்டான் செந்திலகன். சந்தேகத்தோடு தனது கையிலிருந்த கருவியின் மூலம் சூரியனின் வெப்பத்தையும் அளந்தான். 42 செல்சியஸ் என்று காட்டியது. 42 செல்சியஸ் ஏன் தனக்கு மட்டும் இரு மடங்கு சூட்டை தருகிறது என்று குழம்பினான். உண்மையில் தனக்குள் ஏதோ பிரச்சனை என்று புரிந்துக் கொண்டவனுக்கு பயம் அதிகரித்தது.
வீடு வந்து சேர்ந்ததும் செந்திலகனின் கையை விட்ட ரசிகா சந்தேகத்தோடு தன் உள்ளங்கையை பார்த்தாள். ஈரமாக இருந்தது. செந்திலகனையும் கவனித்தாள். அவனின் நெற்றியில் சில துளிகள் வியர்வை இருந்தது.
"திரைப்படங்களில் காட்டப்பட்டது போலவே உனக்கு வியர்க்கிறது செந்திலகா.." என்று அவனின் நெற்றியை நோக்கி கையை காட்டினாள் ரசிகா.
செந்திலகன் தன் நெற்றியை தொட்டுப் பார்த்தான்.
"நான் சாக போகிறேனா.?" என்றான் கவலையோடு.
ரசிகா சுற்றும் முற்றும் பார்த்தாள். வீட்டின் சுற்றுசுவரின் அருகே அவனை இழுத்துச் சென்றாள். அவ்விடத்தில் எந்த கருவிகளும் இல்லையென்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள்.
"நீ மனிதனாக மாறிட்டு இருக்க.." என்றாள்.
செந்திலகன் பயத்தோடு மறுப்பாக தலையசைத்தான்.
"இது எப்படி நடக்கும்.? நான் ஒரு மனித எந்திரம்.." என்றான்.
"அதுவும் இல்லாம செவ்வாயில் உள்ள உண்மை மனுசங்களே இன்னும் மனிதர்களாக மாறாமல் இருக்கும்போது நான் எப்படி மனுசனா மாற முடியும்.?" என்றான் சந்தேகத்தோடு.
"தெரியல.. ஆனா மனுசங்களுக்கு மட்டும்தான் வியர்க்கும்ன்னு நான் படிச்சிருக்கேன். ரோபோட்களுக்கு வியர்க்காது."
"நானும்தான் அதை படிச்சிருக்கேன் ரசிகா.. ஆனா இதை எப்படி என்னால நம்ப முடியும்.? அப்படி ஒருவேளை நான் மனுசனா மாறிட்டு இருக்கேன்னு வச்சிக்க.. அத்தோடு என் வாழ்க்கை போயிடுச்சி. என்னை ஆராய்ச்சி செய்யணும்ன்னு சொல்லி ரோபோட்கள் தூக்கிட்டு போய் சிறை பண்ணிடுவாங்க.. அப்புறம் கடைசிவரை நான் உன்னை பார்க்கவே முடியாது ரசிகா.." என்றான் அவளின் கன்னங்களை பற்றியபடி.
ரசிகாவிற்கு நெஞ்சிற்குள் என்னவோ செய்தது. அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் மாற்றத்தை தந்தது.
"எனக்கு ஒரு மாதிரியா இருக்கு செந்திலகா.. திரைப்படத்துல அழுவாங்களே அப்படி அழணும்ன்னு தோணுது.." என்றவளின் விழிகளில் என்னவோ திரை கட்டியது. செந்திலகன் அவளின் கண்களை நோக்கி கையை நீட்டினான். அவளின் கண்களில் இருந்த திரை மறைந்த நேரத்தில் அவளின் கன்னத்தில் இருந்த ஈரத்தை துடைத்தான்.
"நீ அழற.." என்றான்.
ரசிகா பயத்தோடு தன் முகத்தை மூடிக் கொண்டாள்.
"இந்த விசயம் ரோபோட்களுக்கு தெரிஞ்சா நாம பிரிக்கப்பட்டு விடுவோம்.." என்றாள். அவளின் கண்கள் எரிய ஆரம்பித்தது. புது உணர்வாக இருந்தது அதுவும்.
தொடரும் நட்புகளே. எபி பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க நட்புகளே
# tamil novels
# science fiction
# crazy writer story
நடப்பது சிரமம். தானாய் உறங்குவதும் சிரமம். தினம் அலுவலகம் சென்று உழைத்து வருவதும் சிரமம். அவனே அவனது மூளையை பயன்படுத்தி பாடங்களை படித்து ஒப்பித்து, எழுதி படிப்பகத்தை விட்டு வெளியே வந்தான். இப்போது அலுவலகத்திலும் அவனேதான் தினம் எழுத வேண்டும். அவனுக்கு மேலிருக்கும் இயந்திர மனிதன் என்ன சொல்கிறானோ அதை செய்து முடிக்க வேண்டும்.
மைன்டி8 மட்டுமல்ல அங்கிருந்த அனைத்து மனிதர்களுமே இந்த வாழ்க்கையை வெறுத்தார்கள். நான்கு தலைமுறைகள் முன்னால் வரை என்ன நடந்தது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். எழுவது முதல் உறங்குவது வரை அனைத்து நேரங்களிலும் மனிதர்கள் ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுக்கான வேலைகளை செய்ய இயந்திரங்கள் காத்து கிடந்தன. அவர்களின் தாகம், பசி தீரவும் மாத்திரைகள்தான் பயன்படுத்தப்பட்டன. அவர்களுக்குள் காதல், காமம், தூக்கம் வருவதற்கும் மாத்திரைகள்தான் பயன்படுத்தப்பட்டன.
அனைத்தும் எளிமையாக இருந்தன அப்போது. மானிட புரட்சி ஏற்பட்ட பிறகு அனைத்துமே கடினமாகி விட்டன. மனிதர்கள் பலர் இந்த புது வாழ்வுக்கு பயந்து தற்கொலை செய்துக் கொண்டார்கள். வேலைகள் செய்ய யாருக்குதான் பிடிக்கும்.?
ருசி தேவையில்லை. பசியும் தேவையில்லை. அவர்களுக்கு ஓய்வு மட்டுமே தேவை. படுக்கையில் படுத்த வண்ணம் வீடியோ கேம்களை ஆட வேண்டும். அவ்வளவே தேவை.
ஆனால் இவர்களின் எண்ணத்திற்கு மாறாக நிலவுலகில் இருந்த இயந்திர மனிதர்களோ பழைய மனிதர்களை உருவாக்கி விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த கால மனிதர்கள் உண்மையிலேயே மனிதர்களாக இருந்தார்கள். தங்களுக்கு தேவையான அனைத்தையும் அவர்களே தேடிக் கொண்டார்கள்.
ஆனால் இந்த புது யுக மனிதர்களுக்கோ சுவாசித்தலும் கடினம் என்று தற்கொலையை தேடினார்கள். பழங்கால மனிதர்களை பற்றி படித்து கேட்டு வாழ்ந்த இயந்திர மனிதர்களுக்கு அவர்களை பற்றி நினைக்கையிலேயே ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் வாரிசுகள்தான் இவர்கள் என்பதை பற்றி நினைக்கையில் விந்தையாக தோன்றியது.
***
புவியுலகில் இருந்த பண்ணை வீட்டில் செந்திலகன் தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தான். அவனின் எண்ணமெல்லாம் ரசிகாவை பற்றியே இருந்தது.
தான் ஒரு அரை பாதி மெஷின் என்று அவனுக்கு தெரியும். பிறகு ஏன் இப்படியெல்லாம் எண்ணம் வருகிறது என்று குழம்பினான்.
அடுத்த நாள் காலையில் அவனுக்கான எழும் நேரம் வரும் முன்பே அவனுடைய தூக்கம் தெளிந்து விட்டது. அவனை பரிசோதித்த அவனின் செல்ல இயந்திரம் "உனக்கு என்னவோ சரியில்லை செந்திலகன்.. நீ உடனே மருத்துவரை பார்த்தாக வேண்டும்.." என்றது.
செந்திலகனுக்கு இப்படி ஆனது ரசிகாவுக்கும் கவலையை தந்தது. அவனுக்கு துணையென அவளும் மருத்துவர் இல்லத்திற்கு சென்றாள்.
மருத்துவ இயந்திரம் அவனை தலை முதல் கால் வரை பரிசோதித்தது. அவனின் உடம்பில் எந்த குறையுமே இல்லை.
"உனக்குள் ஏதாவது எண்ணங்கள் தோன்றுகிறதா செந்திலகன்.?" சந்தேகத்தோடு கேட்டது அவனை பரிசோதித்துக் கொண்டிருந்த எந்திர மனிதனான நியாக்.
செந்திலகன் தயங்கினான். அவனின் தயக்கம் நியாக்கிற்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.
"எண்ணங்களை பற்றி எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை டாக்டர்.! என்னை மீறி நான் எண்ணுகிறேன். எனக்குள் ஒரு குரல் ஒலிக்கிறது. எனது மூளைக்குள் யாரோ ஒளிந்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது. சில நேரங்களில் என்னை நினைத்து எனக்கு பயமாகவும் இருக்கிறது.." என்றான்.
நியாக்கின் சந்தேகம் அதிகமானதே தவிர குறையவில்லை.
"சரி நீ கிளம்பு.. நான் சொல்லும் இன்னொரு நாள் வா.." என்றுச் சொல்லி அவனை அனுப்பி வைத்தது.
செந்திலகன் மருத்துவ இல்லத்தின் வெளியே வந்து நின்று வானத்தை பார்த்தான். சூரியனின் வெளிச்சத்தால் கண்கள் கூசியது. தன் காலுக்கடியில் இருந்த ஓடும் சக்கரங்களை இயக்கினான். அவன் நகரும் முன் அவனின் கரத்தை எட்டிப் பிடித்தாள் ரசிகா.
"நாம சேர்ந்துப் போகலாம்.." என்றாள்.
செந்திலகன் புன்னகையோடு அவளின் கையில் தன் கையை கோர்த்துக் கொண்டான்.
இருவரின் பாத சக்கரங்களும் ஒரே சீராக ஓடியது. ஈயத்தால் மெருக்கேற்றப்பட்ட சாலைகளில் இருவரும் பாய்ந்தோடினர்.
வீடு போய் சேரும் முன் சூரியனை இரண்டு மூன்று முறை பார்த்து விட்டான் செந்திலகன். சந்தேகத்தோடு தனது கையிலிருந்த கருவியின் மூலம் சூரியனின் வெப்பத்தையும் அளந்தான். 42 செல்சியஸ் என்று காட்டியது. 42 செல்சியஸ் ஏன் தனக்கு மட்டும் இரு மடங்கு சூட்டை தருகிறது என்று குழம்பினான். உண்மையில் தனக்குள் ஏதோ பிரச்சனை என்று புரிந்துக் கொண்டவனுக்கு பயம் அதிகரித்தது.
வீடு வந்து சேர்ந்ததும் செந்திலகனின் கையை விட்ட ரசிகா சந்தேகத்தோடு தன் உள்ளங்கையை பார்த்தாள். ஈரமாக இருந்தது. செந்திலகனையும் கவனித்தாள். அவனின் நெற்றியில் சில துளிகள் வியர்வை இருந்தது.
"திரைப்படங்களில் காட்டப்பட்டது போலவே உனக்கு வியர்க்கிறது செந்திலகா.." என்று அவனின் நெற்றியை நோக்கி கையை காட்டினாள் ரசிகா.
செந்திலகன் தன் நெற்றியை தொட்டுப் பார்த்தான்.
"நான் சாக போகிறேனா.?" என்றான் கவலையோடு.
ரசிகா சுற்றும் முற்றும் பார்த்தாள். வீட்டின் சுற்றுசுவரின் அருகே அவனை இழுத்துச் சென்றாள். அவ்விடத்தில் எந்த கருவிகளும் இல்லையென்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள்.
"நீ மனிதனாக மாறிட்டு இருக்க.." என்றாள்.
செந்திலகன் பயத்தோடு மறுப்பாக தலையசைத்தான்.
"இது எப்படி நடக்கும்.? நான் ஒரு மனித எந்திரம்.." என்றான்.
"அதுவும் இல்லாம செவ்வாயில் உள்ள உண்மை மனுசங்களே இன்னும் மனிதர்களாக மாறாமல் இருக்கும்போது நான் எப்படி மனுசனா மாற முடியும்.?" என்றான் சந்தேகத்தோடு.
"தெரியல.. ஆனா மனுசங்களுக்கு மட்டும்தான் வியர்க்கும்ன்னு நான் படிச்சிருக்கேன். ரோபோட்களுக்கு வியர்க்காது."
"நானும்தான் அதை படிச்சிருக்கேன் ரசிகா.. ஆனா இதை எப்படி என்னால நம்ப முடியும்.? அப்படி ஒருவேளை நான் மனுசனா மாறிட்டு இருக்கேன்னு வச்சிக்க.. அத்தோடு என் வாழ்க்கை போயிடுச்சி. என்னை ஆராய்ச்சி செய்யணும்ன்னு சொல்லி ரோபோட்கள் தூக்கிட்டு போய் சிறை பண்ணிடுவாங்க.. அப்புறம் கடைசிவரை நான் உன்னை பார்க்கவே முடியாது ரசிகா.." என்றான் அவளின் கன்னங்களை பற்றியபடி.
ரசிகாவிற்கு நெஞ்சிற்குள் என்னவோ செய்தது. அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் மாற்றத்தை தந்தது.
"எனக்கு ஒரு மாதிரியா இருக்கு செந்திலகா.. திரைப்படத்துல அழுவாங்களே அப்படி அழணும்ன்னு தோணுது.." என்றவளின் விழிகளில் என்னவோ திரை கட்டியது. செந்திலகன் அவளின் கண்களை நோக்கி கையை நீட்டினான். அவளின் கண்களில் இருந்த திரை மறைந்த நேரத்தில் அவளின் கன்னத்தில் இருந்த ஈரத்தை துடைத்தான்.
"நீ அழற.." என்றான்.
ரசிகா பயத்தோடு தன் முகத்தை மூடிக் கொண்டாள்.
"இந்த விசயம் ரோபோட்களுக்கு தெரிஞ்சா நாம பிரிக்கப்பட்டு விடுவோம்.." என்றாள். அவளின் கண்கள் எரிய ஆரம்பித்தது. புது உணர்வாக இருந்தது அதுவும்.
தொடரும் நட்புகளே. எபி பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க நட்புகளே
# tamil novels
# science fiction
# crazy writer story