"அவர்கள் சாகவில்லை. பசியையும் சேர்ந்து உணர்ந்துள்ளார்கள்.. நமக்கு மரணம் நெருங்குகிறது.." பயத்தோடு சொன்னாள் மியானி7.
"இவர்களை எப்படியாவது அழித்தே ஆக வேண்டும்.." என்றான் மைன்டி8. சாய்னியாவிற்குதான் கஷ்டமாக இருந்தது. செந்திலகனும் ரசிகாவும் இவள் பார்க்காத வேறு ஒரு பிராணிகளை போல இருந்தார்கள். அதுவே அவளுக்கு புது பிடிப்பை தந்திருந்தது. அவர்களை பார்க்கையில் புது நம்பிக்கை பிறந்தது அவளுக்குள்.
***
செந்திலகன் ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்த அந்த பப்பாளியை பறித்தான்.
"தக்காளியின் சுவை வித்தியாசமாக இருக்கிறது. தக்காளி இப்படி சுவைக்கும் என்று நான் கற்பனை கூட செய்யவில்லை.." என்றாள் ரசிகா.
"தக்காளி இனிப்பும் புளிப்பும் கலந்தது.. இதை சாப்பிடு.." என்று தன்னிடமிருந்த கத்தியால் பப்பாளியை இரண்டாய் அறுத்து அவளிடம் நீட்டினான்.
அதை சுவைக்க முயன்ற ரசிகாவிடம் "இதன் தோலை உண்ண கூடாது.." என்றான்.
"எனக்கும் தெரியும்.." என்ற ரசிகா பழத்தை உண்டாள். முதல் வாய் உண்ணும்போதே பாதி மயக்கம் தீர்ந்து விட்டதை போலிருந்தது.
"ஆதி காலத்தில் ஆண்டவன் உருவாக்கிய இரு மனிதர்கள் இதே போல பழம் பறித்து உண்டு மரணத்தை சாபமாக பெற்றார்களாம்.." என்றான் செந்திலகன் ரசிகாவின் இதழைப் பார்த்தபடி.
ரசிகா அவனை பார்த்து சிரித்தாள்.
"ஆனால் மரணம் என்பது சாபமல்ல.. வரம் என்பது எனது கணிப்பு.!" என்றாள்.
இருவரும் அந்த தோட்டத்தில் இருந்த காய் பழங்களின் சுவையை பரிசோதித்தார்கள்.
என்றாவது ஒருநாள் உண்மையான மனிதர்கள் பிறக்கையில் அவர்களுக்கு தேவைப்படும் என்றுதான் பூமியில் இப்படி பண்ணைகளை வளர்த்தார்கள் நிலவிலுள்ள இயந்திர மனிதர்கள். அவர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை என்பதை நிலவில் இருந்தபடி பார்த்து மகிழ்ந்தார்கள் அவர்கள்.
சில பழங்களின் சுவை ரசிகாவிற்கு பிடிக்கவில்லை. ருசி தந்த பழங்களை மட்டும் பறித்துக் கொண்டு தங்களின் வீடு நோக்கி நடந்தார்கள். ஆனால் இடையிலேயே அவர்களை மறித்து நிறுத்தினான் மைன்டி8.
"உங்களால் ஆபத்து. இனியும் உங்களை உயிரோடு விடுவதாக இல்லை.." என்றவன் தன் துப்பாக்கியை எடுத்துச் சுட்டான்.
இவனின் திடீர் தாக்குதலை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. ரசிகாவும் செந்திலகனும் அந்த கதிர்வீச்சிலிருந்து தப்பும் முன் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றாள் சாய்னியா2.
கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு தரையில் விழுந்தாள் சாய்னியா2.
"சாய்னியா2.." அதிர்ந்துப் போய் சாய்னியா2வின் அருகே ஓடினாள் ரசிகா.
மைன்டி8 மறுபடியும் சுட முயன்றான். அவனின் அருகே பாய்ந்துச் சென்ற செந்திலகன் அவனை தாக்கினான்.
செந்திலகன் தந்த ஒரு அடிக்கே தரையில் சுருண்டு விழுந்தான் மைன்டி8.
ரசிகா சாய்னியா2வை தன் மடியில் கிடத்தினாள்.
"சாய்னியா2.." கண்ணீர் விட்டபடி அந்த சிறுமியின் கன்னங்களை தட்டினாள்.
"நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கிங்க.." என சொல்லிவிட்டு அத்தோடு கண்களை மூடினாள் சாய்னியா2. அதன்பிறகும் அவளின் கன்னங்களை தட்டிக் கொண்டே இருந்தாள் ரசிகா. கண்ணீர் ஆறாக பெருகியது அவளுக்கு.
இதே போல் ஒரு குழந்தை வேண்டுமென்று அவளும் பல வருடங்களாக ஆசைக்கொண்டு இருக்கிறாள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு குழந்தை தன் மடியில் உயிர் விட்டதைக் கண்டு ஓவென கதறியழுதாள்.
"நீங்க இருக்க கூடாது." என்ற மியானி7 தன் கணவனை தாக்கிக் கொண்டிருந்த செந்திலகனின் பின்னால் வந்து நின்றாள். தான் ரகசியமாய் மறைத்து வைத்திருந்த மின்சார தாக்குதல் மெஷினை மெள்ள வெளியே எடுத்தாள். அந்த மெஷின் ஐந்து நொடிகளில் எதிராளியை கொன்று விடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
அவள் செந்திலகனை கொல்ல இருந்த நேரத்தில் என்னவோ அவளை தாக்கியது. தூரமாக போய் விழுந்தாள் அவள்.
தியேந்த்ரி அவளை முறைத்தபடி அவள் முன் நின்றது.
"துணை தலைமை ரோபோட் ஹீயூமன்.." என்று முனகியவளின் கழுத்தை பற்றி மேலே தூக்கியது தியேந்த்ரி.
"என்னை தாக்காதீர்கள்.. பிறகு நான் தற்கொலை செய்துக் கொள்வேன்.." என்றவளை மீண்டும் தரையில் அடித்தது தியேந்த்ரி.
"இறந்துப் போ.." என்று கர்ஜித்தது. பயந்துப் போய் விட்டாள் மியானி7.
வந்து நின்ற இயந்திர மனிதர்களை கவனிக்கவே இல்லை செந்திலகன். மைன்டி8 தரையில் விழுந்ததும் ரசிகாவை தேடிதான் ஓடினான்.
இறந்துக் கிடந்த சாய்னியா2வை பார்த்து அவனும் கதறினான்.
மைன்டி8யையும், மியானி7வையும் மருத்துவ இல்லத்துக்கு எடுத்துச் செல்லும்படி தன்னோடு வந்த காவலர்களிடம் உத்தரவிட்டது ஏந்த்ரி.
செந்திலகனின் தோளை தொட்டது தியேந்த்ரி.
"அந்த மனித பெண் இறந்து விட்டாள்.." என்றது.
ரசிகாவின் அழுகை கூடியது.
"உங்களின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடிகிறது.." என்ற தியேந்த்ரி அவர்கள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தது. ரசிகா மயங்கி விழுந்த பிறகு செந்திலகனின் அனுமதியோடு அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் சாய்னியா2வின் சடலம் புதைக்கப்பட்டது.
ரசிகா மீண்டும் கண் விழித்தபோது அவர்களின் மர வீட்டில் இருந்தாள். அவளின் அருகே பூங்கொத்து ஒன்று இருந்தது. சோகமாய் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான் செந்திலகன். மயங்கும் முன் நிகழ்ந்ததை நினைத்து பார்த்த ரசிகா விம்மி அழுதாள். அவளின் அழுகை குரல் கேட்டு எழுந்து வந்தான் செந்திலகன்.
அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். இறந்த பெண்ணின் முகம் ரசிகாவின் மனதை விட்டுப் போகவே இல்லை.
அவள் அழுது ஓய்ந்தாள்.
"நாம இனி நம் இஷ்டபடி வாழலாம்ன்னு ஏந்த்ரியும், தியேந்த்ரியும் சொல்லி இருக்காங்க.." என்றான்.
அவனின் அணைப்பில் இருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
"நாம என்ன வேணாலும் பண்ணலாம் ரசிகா. இந்த பூமியில் எங்கு வேணாலும் நடமாடலாம். எந்த பறவையையும், மிருகத்தையும் வளர்க்கலாம். எந்த உணவையும் உண்ணலாம். அழலாம். படிக்கலாம். சிரிக்கலாம். கொஞ்சி விளையாடலாம்.." என்றான்.
ரசிகாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் கசிந்தது.
"ஆனா நம்மால சாய்னியா2வை திரும்ப கொண்டு வர முடியாதே.." என்றாள்.
"ஆனா அவளை போன்று ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும். இயந்திர மனிதர்கள் நமக்கு முழு அதிகாரம் தந்திருக்கிறாரகள்.." என்றான்.
அவன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை.
"நம்மை உண்மை மனிதர்களென்று அறிவித்து விட்டார்கள் ரசிகா. நாம் செய்த வேலைகளும், இந்த பூமியின் சூழலுமே நமக்கு இந்த தகுதியை பெற்றுத் தந்துள்ளது. நாம் ஆசைக்கொண்டு குழந்தைப் பெற்றுக் கொள்ள முயன்றால் நமக்கான முழு மருத்துவ ஒத்துழைப்பையும் அவர்கள் தருவதாக சொல்லி உள்ளார்கள்.." என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அழிந்துப் பிறந்த அந்த பூமியில் தரப்பட்ட, பெறப்பட்ட முதல் முத்தம் அது.
செவ்வாயில் இருந்த மக்கள் அனைவரையும் ஓரிடத்தில் கூட்டி இருந்தார்கள் இயந்திர மனிதர்கள்.
"பூமியில் உண்மை மனிதர்கள் உருவாகி விட்டார்கள். அதனால் இனி உங்களின் தற்கொலைகளை நாங்கள் தடுக்க போவதில்லை. வாழ விருப்பம் உள்ளவர்கள் இனி நீங்களாக வாழலாம். உங்களுக்கு தரப்பட்ட வசதிகள் இனி குறைந்துக் கொண்டே செல்லும். நீங்கள் நிலைத்து வாழ விரும்பினால் உங்களின் வாழ்க்கை முறையை மாற்றி உழைக்க கற்றுக் கொள்ளலாம். இல்லையேல் பூமியில் சென்று வாழலாம்.." என்றுச் சொல்லிவிட்டு கிளம்பினார்கள் அவர்கள்.
மக்கள் அதிர்ந்துப் போனார்கள். பத்து சதவீத மக்கள் அன்றைய நாளிலேயே தற்கொலை செய்துக் கொண்டார்கள். முப்பது சதவீத மக்கள் வசதிகள் உள்ளவரை வாழ்ந்து விட்டு பிறகு சாகலாம் என்று முடிவெடுத்தார்கள். நாற்பது சதவீத மக்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருபது சதவீத மக்கள் மட்டும் பூமிக்கு சென்றார்கள்.
சில வருடங்களுக்கு பிறகு..
பூமியின் புல்வெளிகளில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் சில குழந்தைகள். செவ்வாயில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு இங்கே முழு ஆனந்தம் இல்லைதான். ஆனால் இந்த பூமியின் மடி அவர்களின் தாய் மடி போல் இருந்தது. அவர்களுக்குள் புது உணர்வுகளையும், சிந்தனைகளையும் தந்தது.
"சாய்னியா.." தன் மகளை அழைத்தாள் ரசிகா.
சாய்னிகா பூ மாலையோடு ஓடி வந்தாள்.
"அம்மா.. இதை பாரு.. நான் இதை உனக்காக கட்டிக் கொண்டு வந்தேன்.." என்றாள் அந்த பத்து வயது சிறுமி.
"அருமையான வாசம்.." என்ற ரசிகா குழந்தையை தன்னோடுக் கட்டிக் கொண்டாள்.
தோட்டத்தில் அமர்ந்திருந்தான் செந்திலகன். அவனை சுற்றி அவனின் மற்ற குழந்தைகள் நால்வரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இந்த வாழ்க்கை அவனுக்கு பிடித்திருந்தது. இந்த வாழ்வில் அர்த்தம் உள்ளதாக நம்பினான். தங்களுக்கான உணவை அவனும் ரசிகாவும்தான் தயாரித்தார்கள். மண்ணோடு விளையாடினார்கள். மழையோடு குளித்தார்கள். காற்றோடு கதைத்தார்கள். குழந்தைங்களின் புன்சிரிப்பில் உயிர் வளர்த்தனர். காதல் முதல் பசி வரை அனைத்தையும் அனுபவித்தார்கள். ஆக மொத்தத்தில் மனிதர்களாக வாழ முயன்றார்கள்.
"மனிதர்களுக்காக படைக்கப்பட்ட பூமி இது.. மனிதர்களை போன்ற பலவாயிரம் கோடி உயிரினங்களுக்காக படைக்கப்பட்டது இந்த பூமி.." என்றது ஏந்த்ரி நிலவின் புழுதி பரப்பில் நின்றபடி.
ஆம் பூமியில் இருப்பவை சாதாரண பண்ணை வீடுகள் அல்ல. பனி மலர் வீடுகள். அவற்றுக்கான மதிப்பு எப்போதும் மாறாது.
முற்றும். நன்றிகளுடன் crazy writer. ரொம்ப ஷார்ட் ஸ்டோரி. ஒரு காம்படிஷனுக்கு 5 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட கதை கேட்டு இருந்தாங்க. இதை எழுதினேன். ஆனா அனுப்ப முடியாம போயிடுச்சி. இதை எழுதி டூ இயர்ஸ் ஆகுது. இப்ப இங்கே இந்த கதையை பப்ளிஷ் பண்ணி இருக்கேன். எப்படி இருக்கணும் மறக்காம சொல்லுங்க.
# தமிழ் நாவல்கள்
# முழு நாவல்கள்
# அறிவியல் புனைவு
# சிறுகதைகள்
# குறுநாவல்
# சயின்ஸ் பிக்சன்
# கிரேசி ரைட்டர் நாவல்ஸ்.
"இவர்களை எப்படியாவது அழித்தே ஆக வேண்டும்.." என்றான் மைன்டி8. சாய்னியாவிற்குதான் கஷ்டமாக இருந்தது. செந்திலகனும் ரசிகாவும் இவள் பார்க்காத வேறு ஒரு பிராணிகளை போல இருந்தார்கள். அதுவே அவளுக்கு புது பிடிப்பை தந்திருந்தது. அவர்களை பார்க்கையில் புது நம்பிக்கை பிறந்தது அவளுக்குள்.
***
செந்திலகன் ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்த அந்த பப்பாளியை பறித்தான்.
"தக்காளியின் சுவை வித்தியாசமாக இருக்கிறது. தக்காளி இப்படி சுவைக்கும் என்று நான் கற்பனை கூட செய்யவில்லை.." என்றாள் ரசிகா.
"தக்காளி இனிப்பும் புளிப்பும் கலந்தது.. இதை சாப்பிடு.." என்று தன்னிடமிருந்த கத்தியால் பப்பாளியை இரண்டாய் அறுத்து அவளிடம் நீட்டினான்.
அதை சுவைக்க முயன்ற ரசிகாவிடம் "இதன் தோலை உண்ண கூடாது.." என்றான்.
"எனக்கும் தெரியும்.." என்ற ரசிகா பழத்தை உண்டாள். முதல் வாய் உண்ணும்போதே பாதி மயக்கம் தீர்ந்து விட்டதை போலிருந்தது.
"ஆதி காலத்தில் ஆண்டவன் உருவாக்கிய இரு மனிதர்கள் இதே போல பழம் பறித்து உண்டு மரணத்தை சாபமாக பெற்றார்களாம்.." என்றான் செந்திலகன் ரசிகாவின் இதழைப் பார்த்தபடி.
ரசிகா அவனை பார்த்து சிரித்தாள்.
"ஆனால் மரணம் என்பது சாபமல்ல.. வரம் என்பது எனது கணிப்பு.!" என்றாள்.
இருவரும் அந்த தோட்டத்தில் இருந்த காய் பழங்களின் சுவையை பரிசோதித்தார்கள்.
என்றாவது ஒருநாள் உண்மையான மனிதர்கள் பிறக்கையில் அவர்களுக்கு தேவைப்படும் என்றுதான் பூமியில் இப்படி பண்ணைகளை வளர்த்தார்கள் நிலவிலுள்ள இயந்திர மனிதர்கள். அவர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை என்பதை நிலவில் இருந்தபடி பார்த்து மகிழ்ந்தார்கள் அவர்கள்.
சில பழங்களின் சுவை ரசிகாவிற்கு பிடிக்கவில்லை. ருசி தந்த பழங்களை மட்டும் பறித்துக் கொண்டு தங்களின் வீடு நோக்கி நடந்தார்கள். ஆனால் இடையிலேயே அவர்களை மறித்து நிறுத்தினான் மைன்டி8.
"உங்களால் ஆபத்து. இனியும் உங்களை உயிரோடு விடுவதாக இல்லை.." என்றவன் தன் துப்பாக்கியை எடுத்துச் சுட்டான்.
இவனின் திடீர் தாக்குதலை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. ரசிகாவும் செந்திலகனும் அந்த கதிர்வீச்சிலிருந்து தப்பும் முன் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றாள் சாய்னியா2.
கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு தரையில் விழுந்தாள் சாய்னியா2.
"சாய்னியா2.." அதிர்ந்துப் போய் சாய்னியா2வின் அருகே ஓடினாள் ரசிகா.
மைன்டி8 மறுபடியும் சுட முயன்றான். அவனின் அருகே பாய்ந்துச் சென்ற செந்திலகன் அவனை தாக்கினான்.
செந்திலகன் தந்த ஒரு அடிக்கே தரையில் சுருண்டு விழுந்தான் மைன்டி8.
ரசிகா சாய்னியா2வை தன் மடியில் கிடத்தினாள்.
"சாய்னியா2.." கண்ணீர் விட்டபடி அந்த சிறுமியின் கன்னங்களை தட்டினாள்.
"நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கிங்க.." என சொல்லிவிட்டு அத்தோடு கண்களை மூடினாள் சாய்னியா2. அதன்பிறகும் அவளின் கன்னங்களை தட்டிக் கொண்டே இருந்தாள் ரசிகா. கண்ணீர் ஆறாக பெருகியது அவளுக்கு.
இதே போல் ஒரு குழந்தை வேண்டுமென்று அவளும் பல வருடங்களாக ஆசைக்கொண்டு இருக்கிறாள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு குழந்தை தன் மடியில் உயிர் விட்டதைக் கண்டு ஓவென கதறியழுதாள்.
"நீங்க இருக்க கூடாது." என்ற மியானி7 தன் கணவனை தாக்கிக் கொண்டிருந்த செந்திலகனின் பின்னால் வந்து நின்றாள். தான் ரகசியமாய் மறைத்து வைத்திருந்த மின்சார தாக்குதல் மெஷினை மெள்ள வெளியே எடுத்தாள். அந்த மெஷின் ஐந்து நொடிகளில் எதிராளியை கொன்று விடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
அவள் செந்திலகனை கொல்ல இருந்த நேரத்தில் என்னவோ அவளை தாக்கியது. தூரமாக போய் விழுந்தாள் அவள்.
தியேந்த்ரி அவளை முறைத்தபடி அவள் முன் நின்றது.
"துணை தலைமை ரோபோட் ஹீயூமன்.." என்று முனகியவளின் கழுத்தை பற்றி மேலே தூக்கியது தியேந்த்ரி.
"என்னை தாக்காதீர்கள்.. பிறகு நான் தற்கொலை செய்துக் கொள்வேன்.." என்றவளை மீண்டும் தரையில் அடித்தது தியேந்த்ரி.
"இறந்துப் போ.." என்று கர்ஜித்தது. பயந்துப் போய் விட்டாள் மியானி7.
வந்து நின்ற இயந்திர மனிதர்களை கவனிக்கவே இல்லை செந்திலகன். மைன்டி8 தரையில் விழுந்ததும் ரசிகாவை தேடிதான் ஓடினான்.
இறந்துக் கிடந்த சாய்னியா2வை பார்த்து அவனும் கதறினான்.
மைன்டி8யையும், மியானி7வையும் மருத்துவ இல்லத்துக்கு எடுத்துச் செல்லும்படி தன்னோடு வந்த காவலர்களிடம் உத்தரவிட்டது ஏந்த்ரி.
செந்திலகனின் தோளை தொட்டது தியேந்த்ரி.
"அந்த மனித பெண் இறந்து விட்டாள்.." என்றது.
ரசிகாவின் அழுகை கூடியது.
"உங்களின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடிகிறது.." என்ற தியேந்த்ரி அவர்கள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தது. ரசிகா மயங்கி விழுந்த பிறகு செந்திலகனின் அனுமதியோடு அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் சாய்னியா2வின் சடலம் புதைக்கப்பட்டது.
ரசிகா மீண்டும் கண் விழித்தபோது அவர்களின் மர வீட்டில் இருந்தாள். அவளின் அருகே பூங்கொத்து ஒன்று இருந்தது. சோகமாய் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான் செந்திலகன். மயங்கும் முன் நிகழ்ந்ததை நினைத்து பார்த்த ரசிகா விம்மி அழுதாள். அவளின் அழுகை குரல் கேட்டு எழுந்து வந்தான் செந்திலகன்.
அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். இறந்த பெண்ணின் முகம் ரசிகாவின் மனதை விட்டுப் போகவே இல்லை.
அவள் அழுது ஓய்ந்தாள்.
"நாம இனி நம் இஷ்டபடி வாழலாம்ன்னு ஏந்த்ரியும், தியேந்த்ரியும் சொல்லி இருக்காங்க.." என்றான்.
அவனின் அணைப்பில் இருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
"நாம என்ன வேணாலும் பண்ணலாம் ரசிகா. இந்த பூமியில் எங்கு வேணாலும் நடமாடலாம். எந்த பறவையையும், மிருகத்தையும் வளர்க்கலாம். எந்த உணவையும் உண்ணலாம். அழலாம். படிக்கலாம். சிரிக்கலாம். கொஞ்சி விளையாடலாம்.." என்றான்.
ரசிகாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் கசிந்தது.
"ஆனா நம்மால சாய்னியா2வை திரும்ப கொண்டு வர முடியாதே.." என்றாள்.
"ஆனா அவளை போன்று ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும். இயந்திர மனிதர்கள் நமக்கு முழு அதிகாரம் தந்திருக்கிறாரகள்.." என்றான்.
அவன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை.
"நம்மை உண்மை மனிதர்களென்று அறிவித்து விட்டார்கள் ரசிகா. நாம் செய்த வேலைகளும், இந்த பூமியின் சூழலுமே நமக்கு இந்த தகுதியை பெற்றுத் தந்துள்ளது. நாம் ஆசைக்கொண்டு குழந்தைப் பெற்றுக் கொள்ள முயன்றால் நமக்கான முழு மருத்துவ ஒத்துழைப்பையும் அவர்கள் தருவதாக சொல்லி உள்ளார்கள்.." என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அழிந்துப் பிறந்த அந்த பூமியில் தரப்பட்ட, பெறப்பட்ட முதல் முத்தம் அது.
செவ்வாயில் இருந்த மக்கள் அனைவரையும் ஓரிடத்தில் கூட்டி இருந்தார்கள் இயந்திர மனிதர்கள்.
"பூமியில் உண்மை மனிதர்கள் உருவாகி விட்டார்கள். அதனால் இனி உங்களின் தற்கொலைகளை நாங்கள் தடுக்க போவதில்லை. வாழ விருப்பம் உள்ளவர்கள் இனி நீங்களாக வாழலாம். உங்களுக்கு தரப்பட்ட வசதிகள் இனி குறைந்துக் கொண்டே செல்லும். நீங்கள் நிலைத்து வாழ விரும்பினால் உங்களின் வாழ்க்கை முறையை மாற்றி உழைக்க கற்றுக் கொள்ளலாம். இல்லையேல் பூமியில் சென்று வாழலாம்.." என்றுச் சொல்லிவிட்டு கிளம்பினார்கள் அவர்கள்.
மக்கள் அதிர்ந்துப் போனார்கள். பத்து சதவீத மக்கள் அன்றைய நாளிலேயே தற்கொலை செய்துக் கொண்டார்கள். முப்பது சதவீத மக்கள் வசதிகள் உள்ளவரை வாழ்ந்து விட்டு பிறகு சாகலாம் என்று முடிவெடுத்தார்கள். நாற்பது சதவீத மக்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருபது சதவீத மக்கள் மட்டும் பூமிக்கு சென்றார்கள்.
சில வருடங்களுக்கு பிறகு..
பூமியின் புல்வெளிகளில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் சில குழந்தைகள். செவ்வாயில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு இங்கே முழு ஆனந்தம் இல்லைதான். ஆனால் இந்த பூமியின் மடி அவர்களின் தாய் மடி போல் இருந்தது. அவர்களுக்குள் புது உணர்வுகளையும், சிந்தனைகளையும் தந்தது.
"சாய்னியா.." தன் மகளை அழைத்தாள் ரசிகா.
சாய்னிகா பூ மாலையோடு ஓடி வந்தாள்.
"அம்மா.. இதை பாரு.. நான் இதை உனக்காக கட்டிக் கொண்டு வந்தேன்.." என்றாள் அந்த பத்து வயது சிறுமி.
"அருமையான வாசம்.." என்ற ரசிகா குழந்தையை தன்னோடுக் கட்டிக் கொண்டாள்.
தோட்டத்தில் அமர்ந்திருந்தான் செந்திலகன். அவனை சுற்றி அவனின் மற்ற குழந்தைகள் நால்வரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இந்த வாழ்க்கை அவனுக்கு பிடித்திருந்தது. இந்த வாழ்வில் அர்த்தம் உள்ளதாக நம்பினான். தங்களுக்கான உணவை அவனும் ரசிகாவும்தான் தயாரித்தார்கள். மண்ணோடு விளையாடினார்கள். மழையோடு குளித்தார்கள். காற்றோடு கதைத்தார்கள். குழந்தைங்களின் புன்சிரிப்பில் உயிர் வளர்த்தனர். காதல் முதல் பசி வரை அனைத்தையும் அனுபவித்தார்கள். ஆக மொத்தத்தில் மனிதர்களாக வாழ முயன்றார்கள்.
"மனிதர்களுக்காக படைக்கப்பட்ட பூமி இது.. மனிதர்களை போன்ற பலவாயிரம் கோடி உயிரினங்களுக்காக படைக்கப்பட்டது இந்த பூமி.." என்றது ஏந்த்ரி நிலவின் புழுதி பரப்பில் நின்றபடி.
ஆம் பூமியில் இருப்பவை சாதாரண பண்ணை வீடுகள் அல்ல. பனி மலர் வீடுகள். அவற்றுக்கான மதிப்பு எப்போதும் மாறாது.
முற்றும். நன்றிகளுடன் crazy writer. ரொம்ப ஷார்ட் ஸ்டோரி. ஒரு காம்படிஷனுக்கு 5 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட கதை கேட்டு இருந்தாங்க. இதை எழுதினேன். ஆனா அனுப்ப முடியாம போயிடுச்சி. இதை எழுதி டூ இயர்ஸ் ஆகுது. இப்ப இங்கே இந்த கதையை பப்ளிஷ் பண்ணி இருக்கேன். எப்படி இருக்கணும் மறக்காம சொல்லுங்க.
# தமிழ் நாவல்கள்
# முழு நாவல்கள்
# அறிவியல் புனைவு
# சிறுகதைகள்
# குறுநாவல்
# சயின்ஸ் பிக்சன்
# கிரேசி ரைட்டர் நாவல்ஸ்.